தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது.
இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இருவர் மட்டுமே அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும்.
மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும்.
நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.
முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை.
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.
இந்த கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .