சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பிறந்த நாளன்று, விடுமுறை வழங்க காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, காவலர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைத்து போலீசாருக்கும் அவரவர் பிறந்தநாளில், தான் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி, காவல் ஆணையர் உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்க, மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
பிறந்தநாளுக்கு முன்தினம், சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல்நிலையத்தில் உள்ள பிற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தமது உத்தரவில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
காவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை வெற்றி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.