கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் மகாராஷ்ட்ரா , டெல்லி, தமிழ்நாடு,ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் 65 சதவீத பாதிப்புகள் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, கண்காணிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மொத்தம் 60 மாவட்டங்களே மிகப்பெரிய நோய்ச்சுமையை சுமப்பதால் அவை தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.
உள்துறை அமைச்சகத்ததின் வழிகாட்டல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய பிரதமர் அதை மக்களிடம் ஒரு பழக்கமாக ஆக்கும்படி வலியுறுத்தினார்
ஊரடங்கின்போது ஏற்பட்ட பொருளாதாரத்தை மீட்க, தளர்வுகளை அதிகப்படுத்தும்படி கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.