கொரோனாவின் பாதிப்பு , நாடு தழுவிய ஊரடங்கு என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் காவல்துறை , மருத்துவ துறை , வங்கி துறை, மின்துறை , தீயணைப்பு துறை என பல்வேறு அரசு துறைகள் மக்கள் பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன .
இவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவை சேர்ந்த ஓவியர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை பேருந்து நிலையத்தில் ஓவியங்களை வரைந்துள்ளனர் …!!!
இது பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..!
Photo Courtesy: Krishna Captures