ரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்காக, குறிப்பிட்ட 6 மணி நேரத்தில், பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு ரயில்வேயில் ஏற்கனவே இந்த திட்டத்தை, அமல்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், “ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்ட்களுக்கு மின் இணைப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைக் கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.