கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியதால் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரண்டு மையங்கள் திறக்கப்பட்டு அங்கு டோக்கன் முறையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , அங்கு கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.