உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வரிகளை செலுத்த நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை எவ்வித அபராதமும் இன்றி ஜூன் 30 வரை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.