கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.
இதன்பின் அவரது உடல்நலம் தொடர்பாக கூறுகையில், எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை உயிர் காக்கும் கவிருகள் இயங்கி கொண்டுள்ளது. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டி கொண்டிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது கவலைக்கிடமாக உள்ளார்“ என்று தெரிவித்தார்.