பத்ம விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வா்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நிகழ்வாண்டிற்கு கலை பிரிவில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உள்ளிட்ட மேலும் 6 பேருக்கு பத்மவிபூஷண் விருது
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது
மறைந்த கோவை தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது
மொத்த 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு