ரேஷனில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: ரேஷனில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் . சுங்கசாவடிகளை திறந்து சுங்க கட்டணத்தை வசூலிப்பது மனிதநேயமற்ற செயல். மத்திய அரசு இதனை நிறுத்த வேண்டும். துப்பபுரவு பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு போர்கால அடிப்படையில் கொரோனா சோதனை செய்யப்படபட வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது வேதனையான விசயம். ஊரடங்கு முடியும் வரையில் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும். அரசு உட்பட அனைத்து தரப்பினரும் செய்திகளை மின்னஞ்சலில் அனுப்புவது மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
அம்மா உணவகத்தை வைத்து அதிமுக அரசியல் நடத்தாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா உணவகம் அதிமுகவினரின் வசம் தந்தது மோசமான செயல்.அம்மா உணவகத்தை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டது போல் தாரை வார்க்கப்பட்டுள்ளது சரியல்ல. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.