சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று எதற்கும் துணிந்தவன் ‘ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
இன்று சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, சிறப்பு வேடத்தில் நடித்து வரும் ஜெய் பீம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
சூர்யாவின் 39வது படமான இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘கர்ணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரஜிஷா விஜயன், நடிகர் பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்த போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.அடுத்தடுத்த சூர்யா பட அப்டேட்டுகளால் சூரியா ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.