கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் , பல இறப்புகளையும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் இதிலிருந்து வெளியில் வர தங்களால் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.
இந்தியாவும் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்து அந்த அந்த மாநில அரசுகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , பரிசோதனை கூடங்களையும் அமைத்து தொற்று அதிகம் பரவாமல் முயற்சித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதலே மிக தீவிரமாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . பொதுமக்கள் இடையில் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது .
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதப்படுகிறது …!
தமிழக அரசு , மருத்துவத்துறை , காவல்துறை , சுகாதாரத்துறை ஆகியோரின் சீரிய முயற்சியே இதற்கு முதன்மையான காரணம் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் …!
Tamil Nadu last 5 days
April 14: Cases 31, Recovered 23
April 15: Cases 28, Recovered 37
April 16: Cases 25, Recovered 62
April 17: Cases 56, Recovered 103
April 18: Cases 49, Recovered 82
Total new cases 189
Total recovered 307