தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அரசு திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் 60 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.