தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டி தேர்தலுக்கு முன் இரண்டு நாட்கள் சேர்த்து மூன்று நாட்களும் , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.