தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் மதுக்கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன் தினம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியது.
அப்படித் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் திறக்கப்பட்ட டாஸ்மாக்குகளை மூடகோரியது உயர்நீதிமன்றம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.