தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளை பாராட்டி அவரை வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.
உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
பவன் கல்யாண்
தலைவர், ஜனசேனா
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகாநடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.