கொரோனா தொற்று குறித்து மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,77,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 14,016 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 1,895 பேருக்கும், ஈரோட்டில் 1,323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,53,721ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25,895 போ் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 74,247-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 267 போ் பலியாகியுள்ளனா்.
தமிழகம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547-ஆக அதிகரித்துள்ளது.