தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,24,597. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,23,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,20,889.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
- மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,88,63,236.
- இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,72,838.
- மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,24,597.
- இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 15,759 .
- சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1094.
- சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 10842.
- மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 13,62,204 பேர். பெண்கள் 9,62,355 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
- தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8,769 பேர். பெண்கள் 6,990 பேர்.
- இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 29,243 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 21,20,889 பேர்.
- இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 378 பேர் உயிரிழந்தனர்.