தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக விஜய பாஸ்கர் தெரிவித்தார்.