Penbugs
CoronavirusEditorial News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை :

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதியளித்தது.

இந்நிலையில் டாஸ்மாக் சம்மளேனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது ;

அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருக்கும் போக்குவரத்து நெருக்கடி , சமூக விலகல் பின்பற்ற இயலாத கட்டட அமைப்பு , காவல்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை , சுகாதார குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ‌‌.