தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு
தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
அக்டோபர் 31 ஆம் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்த அரசாணை நிறுத்தி வைப்பு
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை நீட்டிப்பு
டீக்கடை, உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி
உணவகங்கள் , டீக்கடைகளில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடரும்
சினிமா படப்பிடிப்புகளில் 100 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி
சென்னை விமான நிலையத்திற்கு இனி தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்