தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 32,472 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 32,778-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 2,663 பேருக்கும், சென்னையில் 1,789 பேருக்கும், ஈரோட்டில் 1,569 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,16,812ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று மேலும் 443 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 26,571-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,75,365 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 57,463 போ் உள்ளனர்.