Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5596 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் மேலும் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் 21 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 364 பேருக்கும், கோவையில் புதிதாக 486 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 395 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 290 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

Leave a Comment