தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3,581 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,344 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,99,807 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,813 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,65,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 12,778 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
82,187 கொரோனா பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.