தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 902 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.