தமிழகத்தில் இன்று புதிதாக 2,279 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் :
இன்று புதிதாக 2,279 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 815 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
80,253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.