தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 81.40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது தொடங்கப்பட்டது.
இதுவரை 81,40,164 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் மட்டும் 3,23,915 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஒன்றே கொரோனவில் இருந்து தற்காத்துக் கொள்ள முக்கிய தீர்வாகும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை கேட்டு கொண்டுள்ளது.