தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது .
பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது
வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை.
லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை – யாருக்கும் கொரோனா இல்லை என தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு