கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளும் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.