கொரோனா காரணமாக 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தன.
ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்பட்டனர்.
இதனால் தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வந்தன.
இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய நடிகர்கள் படங்களான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வெளியாக உள்ளது.
இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.