தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’, என்று பதிவிட்டுள்ளார்.
ராஜினாமா கடிதம்:
தனது ராஜினாமா கடிதத்தை சேலத்திலிருந்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
3-வது முறையாக வெற்றி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று 3-வது முறையாக வெற்றி. அவருக்கு அடுத்தப்படியாக தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் 69 ஆயிரத்து 352 வாக்குகள் பெற்றார்.