Penbugs
Editorial NewsPolitics

துணை ஆய்வாளர் ஆன திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா

சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்ஐ) நியமிக்கப்பட்டுள்ள சிவன்யாவுக்கு பணி நியமனை ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க..ஸ்டாலின்.

திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை எஸ்.சிவன்யா(30), தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு பின்னர் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்ஐ) நியமிக்கப்பட்டார்.

இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து சிவன்யா கூறியாதவாது: காவல் துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் எனது சந்தோஷத்திற்கு எல்லை இல்லை, இதன் மூலம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

அதுவும் முதல்வரின் கையால் பணி நியமன ஆணையை பெற்றது கூடுதல் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளராக பிரித்திகா யாஷினி கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment