ராஜ்பவனில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஆளுநருக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மருத்துவர் அறிவுரையின்பேரில் ஆளுநர் 7 நாள் சுயதனிமைபடுத்தி கொண்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.