உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்திக் கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.