ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கம் கிடைத்தது.
இதில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.
சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார்.
மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு .
இதனை முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!