Penbugs
Editorial News

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

விழுப்புரம் அருகே இரு தரப்புக்கு இடையிலான முன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது தம்பி குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாகவே விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முருகனின் உறவினரான பிரவீன்குமார் என்பவர் ஜெயபாலின் மகன் ஜெயச்சந்திரனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபால் திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமைடந்த முருகனும் அவனது உறவினரான கலியபெருமாள் என்பவரும் சேர்ந்து 10ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. 80 விழுக்காடு காயங்களுடன் ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முருகனையும் கலியபெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம்.

சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது

Related posts

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

பாமக முதற்கட்டமாக 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு

Kesavan Madumathy

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

Penbugs

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

Penbugs

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Penbugs