தமிழ் சினிமா நடிகையும் ,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
அவருடன் பயணித்த வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களின் கார் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயம் அடைந்த யாஷிகாவை மற்றும் நண்பர்கள் இருவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.