அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.