தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,63,363 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,85,57,485 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 72,025 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரையில் 12,573 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 569 பேர் இன்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 568 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 6 ஆயிரத்து 222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 394 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் இதுவரை 2,40,245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.