கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது
சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
காங்கிரஸ் தொகுதி எம்.பி வசந்தகுமார் காலமானார் – அவருக்கு வயது 70
2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்
பின்னர் வாழ்வில் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்
வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்து, பிரபல தொழிலதிபராக வசந்தகுமார் திகழ்ந்தார்
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்பதால், வசந்தகுமாரும் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்தார்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்தார்