நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டவர்களின் மீது பாஜக நாடாளுமன்ற விவகார அமைச்சர் வி.முரளிதரன் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதாவ், சிபிஎம் கட்சியின் கே.கே.ராகேஷ், காங்கிரஸ் எம்.பி.க்கள் சையத் நாசர் ஹுசைன், ரிபுன் போரா, ஏ.ஐ.டி.சியின் டோலா சென், சிபிஎம் கட்சியின் இளமாறம் கரீம் ஆகியோர் ஒருவாரத்துக்கு அவை நிகழ்ச்சிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.