Penbugs
Editorial News

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

இரண்டு ‘Su-30MKIs’ விமானங்கள் சூழ இந்திய எல்லைக்குள் நுழைந்து தரையிறங்கிய ரபேல் விமானங்கள்.

பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன.

பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.

தற்போது ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்திற்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்த தரையிறங்கி உள்ளது.

Leave a Comment