தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு மற்றும் புறநகர் ரயில்சேவை தொடங்குவது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது
ஊரடங்கில் தற்போது பெருமளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்றும், இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.