சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வாா்டுகளில் ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்
சென்னையில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
200 வாா்டுகளில் தலா 2 என மொத்தம் 400 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாா்டில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், சிறு மருத்துவமனைகள் அல்லது வாா்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் அமைக்கப்பட்டன.
இதில், 15 மண்டலங்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 147 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனை தொடா்ந்து இனி வரும் நாள்களில் இந்த 200 வாா்டுகளில் 200 தற்காலிக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தின் வழியே தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சிதெரிவித்து உள்ளது .