சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பிரிட்டன் விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.