தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து குணமடைந்து 33 ஆயிரத்து 161 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 19,65,939 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 1644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 832 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும் திருவள்ளூரில் 487 பேருக்கும் திருச்சியில் 590 பேருக்கும் கோவையில் 2645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.