தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 3,692 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 31,759 போ் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,06,298-ஆக அதிகரித்துள்ளது.