தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,864 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 3,537 பேருக்கும், சென்னையில் 2,689 பேருக்கும், ஈரோட்டில் 1,784 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,68,580ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று மேலும் 493 போ் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 23,754ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து இன்று 32,982 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,39,280-ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3,05,546 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.