ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு இன்று அறிவிப்பு
செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.
வழிபாட்டுத்தலங்கள் திறப்பு
தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.
மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு
கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு
அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ – பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி.
எனினும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களில் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும்.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி; விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் முதல் ரத்து
மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி.மாவட்டங்களுக்கு இடையேயான பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியில்லை – தமிழக அரசு
தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்குத் தடைதமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு
மால்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் அனைத்தும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி – தமிழக அரசு